தியான வீராசனம்
 
செய்முறை:
 
.கால்களை நீட்டி உட்காரவும்.இடது காலை மடித்து வலது புட்டத்தில் குதிகால் படுவது போல்  வைக்கவும்.
 
.வலது  காலை மடித்து இடது காலின் மேலாகக் கொண்டு வந்து இடது புட்டத்தில்   குதிகால் படுமாறு வைக்கவும்.
 
.தலை,முதுகுகளை நேராக வைத்து கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக  வலது பக்க முழங்காலில்  வைக்கவும்.
 
.இதே நிலையில்  ஓய்வுகொண்டு பின் ஆரம்ப  நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
.இனப்பெருக்க உறுப்புகள் சீர்  செய்யப் படுகின்றன.
 
.களைப்பாக இருப்பவர்களுக்கு இவ்வாசனம் புத்துணர்ச்சி அளிக்கிறது.