தண்டாசனம்
 
செய்முறை:
 
.விரிப்பில் கால்களை நீட்டி உட்காரவும்.
 
.உள்ளங்கைகளை இடுப்பினருகில் வைத்து விரல்கள் முன்னோக்கியிருக்குமாறு தரையில் ஊன்றவும்.
 
.கரங்களை நேராக நீட்டி முதுகை நேராக நிமிர்த்தவும்.கால்கள் இரண்டும் இணைந்து இருக்க கால்விரல்கள் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.
 
.இந்நிலையில் சாதாரண  சுவாசத்தை மேற்கொள்ளவும்.
 
.சில நிமிடம் இருந்து விட்டு பின் ஆரம்ப நிலையை அடையவும்.
 
பலன்கள்:
 
.கால்களும்,கைகளும் வலுப்பெறுகின்றன.
 
.முதுகுக் கூன் நிமிர்கிறது.
 
.உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.