.சோமாசனம்
 
.பத்மாசனம் செய்யும் நிலையிலிருந்து இந்த  ஆசனம் செய்தல் வேண்டும்.
 
.விரிப்பில் கால்களை நீட்டி அமர  வேண்டும் .இடது காலை மடித்து வலது பக்கத் தொடை எலும்பைக் குதிகால் தொடும் வண்ணம் உட்காரவேண்டும்.
 
.வலது காலை மடித்து இடது பக்கத் தொடை எலும்பை குதிகால் தொட்டிருக்குமாறு  வைக்க  வேண்டும்.அதே   நேரத்தில் வலப்பாதம் இடத் தொடைக்  கெண்டைக் காலுக்கு   இடைப்பகுதியிலும்,இடது பாதம்,வலது தொடைக் கெண்டைக்  காலுக்கு இடைப் பகுதியிலும் இருக்குமாறு வைக்க வேண்டும்.
 
.இருகுதி கால்களும் சேரும் இடத்தில் வலப் பக்க உள்ளங்கை மேலே இடப் புறங்கையை வைக்க வேண்டும்.சாதரண சுவாசத்தில் ௩௦ விநாடிகள்  இருக்க வேண்டும்.
 
.கைகளை  எடுத்து வலது காலை நீட்டு.
 
.இடது காலை நீட்டு,ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
 
பலன்கள்:
 
.முழங்கால் வலிமை பெறுகிறது.
 
.குதிகால்களின்  நரம்புகள் தொடைப் பகுதிகள் சக்தி பெறுகின்றன.
 
.நுரையீரல்  செயல்பாடு சீராகின்றது..
 
.முழங்கால் மூட்டின் வலி குறைகிறது.