௧௧.சந்தோலாசனம்
 
செய்முறை:
.குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி கைகளைப் பக்கவாட்டில் வைத்துப் படுக்கவும்.
 
.உள்ளங்கைகளைத்  தரையில் பதிக்கவும்.விரல்கள் இணைந்து முன்னோக்கி இருக்க வேண்டும்.
 
.தொடை,வயிறுப் பகுதியை மேலே தூக்கி உடல்நேர்கொட்டில் இருப்பது போல் கொண்டுவரவும்.
 
.கைகள் செங்குத்தாக இருக்க வேண்டும்.முழங்கால்கள் மடங்கக் கூடாது.பார்வை நேராக இருக்கவும்.
 
.இதே  நிலையில்   ஒரு சில நொடிகள் இருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
.நரம்பு மண்டலம் புத்துனர்ச்சியடைகிறது.
 
.கால்,கைகள் வலுப்பெறுவதோடு,அவற்றில் தசைகள் ஏற்றம் பெறுகின்றன.
 
.வயிற்று தொப்பைக் குறைகிறது.
 
.தோள்பட்டை வலி,கண்,கால்வலி நீங்குகிறது.