.சலபாசனம்
 
செய்முறை:
 
.கால்களைச் சேர்த்து வைத்து  குப்புறப் படுக்கவும். முழங்கையை மடக்காமல் நீட்டி விரல்களை மூடி வைக்கவும்.
 
.மூச்சினை உள்ளிழுக்கவும்.
 
.மணிக்கட்டை அழுத்தி  முழங்கால்களை மடக்காமல் கால்கள் இரண்டையும் முடிந்த அளவு உயர்த்தவும்.
 
.மெதுவாகக் கால்களைத் தரைக்குக் கொண்டு வரவும்.
 
.மூச்சினை வெளிவிடவும்.
 
பலன்கள்:
 
.வயிறு,நுரையீரல்,கால்கள் வலுப்பெறும்.
 
.வாயுக்   கோளாறுகள்  நீங்கி ஜீரண சக்தி  அதிகரிக்கும்.
 
.கர்ப்பப்பைக் கோளாறுகள்  நீங்கும்.