௧௧.குக்குட்டாசனம்
 
செய்முறை:
 
.பத்மாசன  நிலையில் இருக்க வேண்டும்.
 
.கைகளை கால்களுக்கு இடையில் விட்டு தரையில் வைக்க வேண்டும்.விரல்கள் முன்புறம் பார்ப்பது போல வைத்திருக்க வேண்டும்.
 
.கையைத் தரையில் அழுத்தி ஊன்றி பத்மாசன  இருக்கையுடன் உடலை மேற் புறமாகத்  தூக்கி உயர்த்த வேண்டும்.
 
.உடல் நிமிர்ந்த நிலையில்  இருக்க வேண்டும்.இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
 
பலன்கள்:
 
.உடல் முழுவதும்  சக்தி தொடர்ந்து சமமாகப் பரவுகிறது.
 
.முழங்கால் வலி,இடுப்பு வலி  ஆகியவை  நீங்குகிறது.
 
.கால்கள் வலுப்பெருகின்டன.
 
.புத்துணர்ச்சி அளிக்கிறது .